தொழில் தொடர்பான பிரச்சினைகள் வேலையின்மை பொருளாதார நெருக்கடி பொருள் இழப்பு ராகு தசை- சனி புத்தி சனி தசை – ராகு புத்தி இருப்பவர்கள் இந்த மகம் நட்சத்திரம் வரும் பவுர்ணமி நாளில் விரதம் இருப்பது நல்லது.
விரதம் இருந்து பார்வதி பரமேஸ்வரனை வழிபடுவதுடன் காசி கயா ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த நீரை உங்கள் ஊரின் சிறப்பு பெற்ற சிவன் கோவிலில் அருளும் இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்யுங்கள். பின்னர் அந்த அபிஷேக நீரை தொழில் நிறுவனம் வீடுகளில் தெளித்து வர தொழில் விருத்தி பெறும்.