பஞ்சபட்சி – 1
காலையில் எழுமுன் சுவாசத்தை நமது புறக்கையை நாசியில் கை வைத்து பார்க்கும் போது சுவாசம் எந்தப்பக்கம் வருகிறது என்று தெரியும் அன்று எந்த பக்கம் சுவாசம் வரவேண்டுமோ அதற்கு எதிர்பக்கம் கையை மடித்து தலைக்கடியில் வைத்து ஒருக்களித்து படுத்தால் நீங்கள் விரும்பும் பக்கம் சுவாசம் வரும்.
படுக்கை விட்டு எழுமுன் செய்ய வேண்டும். இது எளிய முறை.
சரகலை என்ற சுவாசம் பற்றிய தெளிவே பஞ்சபட்சி சாஸ்திரம்
உங்கள் சுவாச இயக்கம் உங்கள் கர்மா படி.
கர்மாபடியே உங்கள் சுவாசம்.
ராட்சசம், தாமசம், சாத்வீகம்
என்ற முக்குணங்களின் வழியாக சுவாசம் கர்மாவை செயல் படுத்தும்.
உங்கள் உடல்கூறுபடி சுவாசம் அட்டவணை உண்டு
நீங்கள் இப்போது அறிந்த அல்லது படித்த பஞ்சபட்சி அட்டவணை அண்டத்துக்கானது இது பஞ்சாங்கம் போன்றது
உங்கள் கர்மாவின்படி சுவாச அட்டவணை உங்கள் சுய ஜாதகம் போன்றது.
பஞ்ச பட்சிகள் ஐந்து.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி மற்றும் மயில்.
இவை பஞ்ச பூத இயக்கங்களோடு ஒத்திட்டிருக்கும்.
பஞ்சபட்சி
பஞ்சபட்சி – 2 வளர் பிறை தேய்பிறை பட்சிகள்
வளர்பிறை + தேய்பறை நட்சத்திரம் பஞ்சபட்சி
அஸ்வினி, பரணி. கார்த்திகை. ரோகிணி, மிருகசீரிஷம் இந்த நட்சத்திரங்களுக்கு வளர்பிறையில்-வல்லூறு- (அகரம்) பட்சியாகவும், தேய்பிறை (அகரம்) –மயில் பட்சியாகவும் வரும்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு – வளர்பிறை யில் (இகரம்) -ஆந்தை- தேய்பிறையில் -கோழிபட்சியாகவும் வரும்.
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை-(உகரம்) யில் பிறந்தவர்களுக்கு -காகம் பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு -காகம் பட்சியாகவும் வரும்.
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களில் வளர்பிறை-(எகரம்) யில் பிறந்தவர்களுக்கு கோழி பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு -ஆந்தை பட்சியாகவும் வரும்.
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரத்தில் வளர்பிறை –(ஒகரம்) யில் பிறந்தவர்களுக்கு –மயில் பட்சியாக வரும்.. தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு –வல்லூறு பட்சியாக வரும்.