#காயம்_எனும்_உடல்
உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி
சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார்.
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் (குற்றாலக் குறவஞ்சி).
காயம் என்பது உடலையும், “சித்தி என்பது வெற்றியையும் குறிக்கும்.
காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே “காயசித்தி என்பர்.
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறும் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த பதிவில் காய சித்தி லேகியம்
எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சாதிக்காய்
வால்மிளகு
லவங்கம்
ஏலரிசி
ஆக்கிராகாரம்
வகைக்கு ஒரு பலம்
(35கிராம்)
சீரகம் 5பலம்
கொடிவேலி வேர்ப்பட்டைச் சூரணம் 2பலம்.
பரங்கிசக்கை 10பலம்
அதிமதுரச் சூரணம் 5பலம்
இந்த பொருட்களை எல்லாம்
வெய்யலில் உலர்த்தி இடித்து சலித்து
எடுத்து
20பலம் பசு நெய் எடுத்து
சட்டியில் விட்டு கீழே தீ வைத்து
பொடித்து வைத்திருக்கும்
சரக்குகளை தூவி கிளறி வேக விட்டு,
வெள்ளை சக்கரை பலம் 20 எடுத்து
40 எலுமிச்சை பழத்தை வெட்டி சாறு எடுத்து வடிகட்டி சாற்றுடன்
சர்க்கரை கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு நன்றாக காய்ச்சி
லோகிய பதத்தில் இறக்கி
குங்குமப்பூ கால் பலம்,
ஒரிஜினல் மாட்டு கோரசனை கால் பலம் பொடித்து போட்டு
நன்றாக கிளறி எடுத்து ஆராவைத்து
ஒரு பாட்டலில் வைத்துக்கொண்டு,
காலை மாலை ஒரு கழச்சிக்காய் அளவு 48நாட்கள் சாப்பிட
உடல் சித்தியாகும்
சகல விதமான நோய்களும் பறந்து ஓடும்.
மருந்து சாப்பிடும் நாட்கள் முழு இச்சாபத்தியம் இருக்க வேண்டும்.
(அதாவது தாம்பத்தியத்தில் ஈடுபட கூடாது)
நன்றி.
Category: