🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*🏵️பதினெட்டு சித்தர்களில் தலையாய சித்தர் அகத்தியர். தமிழ் சித்தர்களில் மிகப்பெரும் சித்தராக விளங்கியவர்.சப்த ரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களுள் முதன்மையானவராகவும் விளங்கிய அகத்தியர் முருகப்பெருமானிடம் தமிழைப் பெற்று அதற்கு இலக்கணம் வகுத்துத் தமிழ் மொழியைதீ தமிழர்களாகிய நமக்கு வழங்கிய மகரிஷி அகத்தியர்.*
*🌷கும்பத்திலிருந்து பிறந்தவராகையால் ‘கும்பமுனி’ என்றும், ‘கும்ப சம்பவர்’ என்றும் அகத்தியருக்குப் பெயர்களுண்டு.*
*🌀ஸ்ரீராமருக்கு ‘ஆதித்ய ஹ்ருதயத்தை’ உபதேசித்தவர்* *ஸ்ரீஹயக்ரீவரிடமிருந்து ‘லலிதா சகஸ்ர நாமத்தை’ப் பெற்றுத்தந்தவர்.*
*💠சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர்* *இது மட்டுமன்றி அகத்தியரின் மனைவியான லோபமுத்திரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை ஆவார்.*
*அகத்தியரின் பெருமைகள்:-*
🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁
*🔱சிவபெருமானின் திருமணத்தைக் காண அனைவரும் வட திசையில் இருந்த கையிலைக்கு வந்தமையால் தென்திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. அதனைச் சமப்படுத்த அகத்திய முனிவர் தென்திசைக்கு வந்திருந்து சிவசக்தி திருமணத்தைத் தமிழகத்தில் தரிசித்தவர் ஆவார்.*
*⚜️அகத்தியர் தாம் நினைத்த பொழுதெல்லாம் சிவசக்தியின் திருமணத்தைக் காண வேண்டும் என்று வரம் பெற்று அம்மையப்பரின் திருமணக் கோலத்தைத் தரிசித்த தலங்கள் திருமணத் தலங்களாக வழங்கப்பட்டு மூலலிங்கத்திற்குப் பின்புறம் அம்மையப்பர் ‘திருமணக் கோலத்தில்’ காட்சியளிப்பர்.*
*📕முச்சங்க வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கிய அகத்தியர் ‘அகத்தியம்’ என்னும் நூலை எழுதியவர்*
*அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய பெரிய சக்திகளை பெற்றார்*
*💧 அகத்தியர் இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீரை முழுவதுமாகக் குடித்து விட இந்திரன் கடலுக்கடியில் ஒளிந்து கொண்ட அசுரர்களை அழித்தார். அசுரர்கள் அழிந்தபின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார்.*
*⛰️அகத்தியர் தென்திசை நோக்கி வந்தபோது விந்தியமலை குறுக்கிடவே அகத்தியரைக் கண்டபின் பணிந்து தாழ்ந்தது*
*🥭மாங்கனி வடிவில் இருந்த வாதாபி என்னும் அரக்கனை உண்டு அழித்தவர்.*
*🎼இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் வென்றவர்*
*💦சிவபூஜை செய்ய கமண்டலத்தில் கொணர்ந்த கங்கை நீரை விநாயகர் விநாயகப் பெருமான் உருக்கொண்டு சாய்த்து விட அதுவே காவிரி ஆனது*
*🌻ராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்*
*🍄அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து ‘பன்னிரு படலம்’ என்னும் நூலை எழுதியுள்ளனர்.*
*📚அகத்தியர் சித்த வைத்தியத்திற்கென பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்து நூல்கள் பல இயற்றியுள்ளார். ‘சமரச நிலை ஞானம்’ என்னும் நூலில் உடலிலுள்ள முக்கிய நரம்பு முடிச்சுகள் பற்றி விளக்கமும், ‘அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்’ என்னும் நூலில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்கு மருத்துவக் குறிப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.*
*📒’அகத்திய நூல்கள்’ எனும் பெயரில் இருபத்தி நான்கு நூல்கள் இயற்றியுள்ளார். ‘அகத்திய ஞானம்’, அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம், ‘அகத்திய சம்ஹிதை’ என்னும் வடமொழி வைத்திய நூலும் அகத்தியர் இயற்றியவையே.*
*👶🏻அகத்தியரின் முன்னோர்கள் எமலோகக் குழியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு காரணத்தை வினவ ‘உனக்கு வாரிசுகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்’ என்றனர். அதனால் விதர்ப்ப நாட்டு அரசன் மகள் லோபமுத்திரையை மணந்து திருதாசூ என்னும் சற்புத்திரனை ஈன்று தம் முன்னோர்களின் கடன் தீர்த்து அவர்களை நற்கதி அடையச் செய்தார்.*
*அகத்தியர் ‘அனந்தசயனம்’ என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகவும் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.*
*🦚புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து ‘வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு பின்னாளில் அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டு ‘அகத்தீஸ்வரமுடையார் ஆலயம்’ என்றும் அழைக்கின்றனர்.*
*☘️ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் போற்றி போற்றி🍁*
🌺🍃🏵️🍂🍀🌸🍃🌼☘️🍂🍁
அகத்தியர்
905