Home ஆன்மீக செய்திகள் ஐயப்பனுக்கு ஆரத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய மங்களம்

ஐயப்பனுக்கு ஆரத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய மங்களம்

by admin
Ayyappan-slokas_ஐயப்பனுக்கு ஆரத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய மங்களம்

1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்

மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்

பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்

 மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்

ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்

ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்

கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்

சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்

சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்

குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்

கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்

ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்

பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்

திவ்ய நாம ஸங்கீர்த்தனம்

தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்

சுவாமியே சரணம் ஐயப்பா

என்று பாடி கற்பூரம் ஆர்த்தி எடுக்க வேண்டும்

You may also like

Translate »