*”ஒழுக்கம் மிக அவசியம்”*
🌼🌼🌼Ⓜ️💲✍️🌼🌼🌼
*மனம், வாக்கு, உடம்பு மற்றும் பணத்தால் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.*
*ஒரு பொருளைப் பெற மனிதன் முயற்சி செய்கிறான். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால் குறுக்கு வழியில் பெற முயற்சிப்பது பாவம்.*
*விக்கிரமாதித்தன் கதையில் கூறப்பட்ட வேதாளத்தை போன்றது மனம். நம் மனத்தை நமக்கு அடிமைப்படுத்துவது தான் நிஜமான வழிபாடு.*
*துணி, உடம்பு, வீடு இவைகள் அழுக்கில்லாமல் இருந்தால் போதாது, முக்கியமாக நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.*
*எதிலுமே சரி, அளவு அறிந்து, ஒரு மட்டத்தோடு நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகிறது.*
*வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டால், பிறகு ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்படுகிறது.*
*உடலும், மனமும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் நம் செயல்கள் அமைய வேண்டும்.*
*ஆசை இல்லாவிட்டால் மனதில் கோபமோ, பயமோ இல்லை. ஆசையின்மை நமக்கு பரிபூரண ஆனந்தம் தரும்.*
🔥🔥🔥Ⓜ️💲✍️🔥🔥🔥
*🌹காஞ்சிப்பெரியவர்🌹*
ஒழுக்கம் மிக அவசியம்-காஞ்சிப்பெரியவர்
557
previous post