⚘
🏵#நமசிவாய என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும்.
🏵️நமசிவாய என்று சொன்னாலே நம் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
🏵️இம்மந்திரத்தினை அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி,முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி,பின் பெற்றோரையும்,குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.
☆மந்திரம்☆
ௐ நமசிவாய!
卐விளக்கம்卐
🌻ௐ-உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது.அது படைத்தல்,காத்தல்,அழித்தல்.அதாவது பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது.
🌻நம-என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை,ஆணவம் கர்மம் என்ற தீய அகந்தகளை காட்டுவதாகும்.
🌻சி-என்பது சிவபெருமானை குறிக்கிறது.
🌻வா-என்பது அம்பாளை குறிக்கிறது.
🌻ய-என்பது மனிதர்களான ஜீவன்களை குறிக்கிறது.
🪄நமசிவாய மந்திரத்தின் மகிமைகள்🪄
🛐நமசிவாய என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.
🛐நமசிவாய!லங்க நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
🛐சவ்வும் நமசிவாய நம என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.
🛐ஸ்ரீயும் நமசிவாய நம என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.
🛐ஊங்கிறியும் நமசிவாய நம என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
🛐ௐ நமசிவாய என்று செபித்தால் காலனை வெல்லலாம்.
🛐லூங் ஓங் நமசிவாய என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
🛐அங் சிவாய நம என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
🛐அங் உங் வங் சிவாய நம என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.
🛐ம் ம் சிவாய நம என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.
🛐இம்மந்திரத்தினை 108 அல்லது 1008 முறை விடாது சொன்னால் நற்பயன்களும் சகல வளமும் பெற முடியும்.
🛐நமசிவாய என்னும் மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் #சிவனும்,தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்கள்.
🙏🏼⚘ௐ நமசிவாய⚘🙏🏼