October 2018
நட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )
(OR)
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி –
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
கார்த்திகை –
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி –
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் –
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை –
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் –
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் –
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் –
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் –
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் –
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் –
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் –
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
சித்திரை –
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளத%A
நமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழல், சம்பவங்கள், நிகழ்வுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதில் நேர்மறை பலன் அடைய உதவும். உதாரணமாக என்றோ நீங்கள் ஒருவருக்கு செய்த உதவி, நீங்கள் கஷ்டத்தில் வாடும் போது ஒரு பலனளித்து செல்லும். அப்படி, உங்கள் வாழ்வில் புகழ், வெற்றி செல்வதை அடைய உதவும் 14 பழக்கங்கள் பற்றி இங்கு காணலாம்…
ஆசீர்வாதம்!
தினமும் பெற்றோர், பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெறுவது. பெரியவர்களை அவமரியாதை செய்யாதிருப்பது.
ஆதிசக்தி!
நமது புராணங்களும், இதிகாசங்களும் பெண் என்பவள் தான் ஆதி சக்தி என குறிப்பிட்டிருக்கிறது. எனவே, பெண்களை மதிக்க வேண்டும். முக்கியமாக தாய், தாரம்
உதவி!
உங்களால் முடிந்த வரை இயலாதோருக்கு உதவுங்கள். பணமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. உணவாக இருக்கலாம், சாலை கடக்க வைப்பது போன்ற சிறு உதவியாக கூட இருக்கலாம். முடிந்த வரை உதவுங்கள்.
விலங்குகள்!
பசு, பறவை, நாய் என விலங்குகளுக்கும் உணவளித்து வாருங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ.
கைகளை பாருங்கள்!
காலை எழுந்தவுடன் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உள்ளங்கை முகத்தில் படும்வண்ணம் மூன்று முறை செய்யுங்கள்.
தேன்!
காலை எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு, தேன் சுவையுங்கள். பிறகு குளிக்க செல்லுங்கள். சூரியனை தினமும் காலை வணங்க மறக்க வேண்டாம்.
செவ்வாய்!
செவ்வாய்க்கிழமைகளில் மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி அதை வீட்டிற்கு வெளிய ஒதுக்குப்புறத்தில் வைத்துவிடுங்கள்.
உணவு பகிர்வு!
அமர்ந்து உணவுண்ணும் முன்பு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு முடிந்த அளவு உணவு பகிர மறக்க வேண்டாம்.
அரசமரம்!
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்கள் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்க வேண்டாம்
கருப்பு கயிறு!
வலது கையில் கருப்பு கயிர் கட்டுங்கள்.
செப்பு பாத்திரத்தில் நீர்!
இரவு தூங்கும் முன்னர் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைக்கவும். மறுநாள் காலை எழுந்ததும் இதை குடியுங்கள்
சுத்தம்!
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ரூ. 21!
எங்கேனும் ஒரு இடத்தில் ரூ. 21 முடித்து வையுங்கள். நீங்கள் தொழில் அல்லது முக்கியமான வேலையாக வெளியே செல்லும் போது இத பணத்தை முடியாதவர்களுக்கு உதவியாக கொடுத்து செல்லுங்கள்.
துளசி!
1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
5.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
6.வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே
பென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள்!!!
வளம் தரும் வாஸ்து
பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப் பார்க்கலாம்:
அட்சதை
ஒரு சிறு மண் கலயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அகல் அளவினதாக இருக்கலாம். அதில் மஞ்சள் கலந்த சிறிதளவு அரிசியைப் (அட்சதை) போட்டு சமையலறையில் வலது பக்க ஓரமாக வையுங்கள். மறுநாள் சமையலின்போது இந்த அட்சதையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதால் நம் முன்னோர் மற்றும் தெய்வங்களின் ஆசியுடன் சமையலறை பிரச்னைகளை எளிதாகக் கையாளும் திறன் கைவரப் பெறும். பூச்சிகள் தொந்தரவும் குறையும். சமையல் பொருள்கள் குறைவின்றி கிடைக்கும்.
சேதாரமும் ஆகாது. அதே மண்கலயத்தை சுத்தம் செய்துவிட்டு மறுநாள், அதற்கடுத்த நாள் என்று தொடர்ந்து அதில் அட்சதையைப் போட்டு வரலாம். அதோடு வீட்டிற்கு யாராவது உறவினர், நண்பர் என்று வந்தால் எடுத்து வைத்திருக்கும் அட்சதையிலிருந்து சிறிதளவு அவர்களுக்குக் கொடுத்து, இந்த பென்சூயி உத்தியையும் சொல்லிக்கொடுத்தால் உறவும், நட்பும் பலப்படும்.
‘இன்றைக்கும் திருமலை தேவஸ்தானத்தில் மடப்பள்ளியில் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அங்கே தாயாரை ஆவாஹனம் செய்த அட்சதையை ஒரு மண் பாண்டத்தில் வைத்துத் தாயாருக்கு முதலில் படைக்கிறார்கள். அடுத்த நாள் மடப்பள்ளி நிவேதனப் பொருட்களைத் தயாரிக்குமுன் இந்த அட்சதையை மூலப் பொருட்களுடன் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்’ என்று கேள்விப்படுகிறோம்.
அதேபோல பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர் பார்வை படும்வகையாக சுமார் 3 அடி உயரமுள்ள மண் பானைகளில் சிவப்பு அன்னத்தை நிரப்பி மூலைகளில் வைக்கிறார்கள். பிறகு இந்த அன்னத்தை பிரசாதங்களுடன் கலந்து பக்தர்களுக்கு நிவேதனப் பொருளாக வழங்குகிறார்கள். தினமும் இப்படி பானைகளில் அன்னத்தை வைப்பது அங்கே வழக்கம்.
வாரணாசியில் அன்னபூரணி கோயிலில் சிவப்பு வண்ண அட்சதையை ஒரு மண் பாத்திரத்தில் இட்டு தேவியின் பார்வை படும்படி வைப்பார்கள். மறுநாள் இந்த அரிசியை மூலப் பொருட்களுடன் கலந்து லட்டு முதலான பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
வீட்டு மரங்களில் காசுநம் வீட்டில் உள்ள மரம் அல்லது செடியில் 3 சிறிய காசுகளை சிவப்பு கலர் நாடாவில் கட்ட வேண்டும். இது நம் கண்களில் படும்வகையில் மாட்டி வைக்கப்பட வேண்டும்.இதனால் காசு, 3 என்ற எண்ணிக்கை, சிவப்பு கயிறு, மரம் ஆகிய அனைத்தும் சேர்ந்து நம் செல்வாக்கை உயர்த்தும். இதை திருஷ்டிக்கான பரிகாரமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
கணினி மேம்பாடு
எட்டு என்ற எண் பொருளாதார வெற்றியும், நிலைத்த செல்வம் ஆகியவற்றை குறிக்கிறது.எட்டு ‘‘ச்சீ” சக்தியுடைய வட்ட வடிவ காசுகளை கட்ட வேண்டும். இதை சிவப்பு நாடாவை கொண்டு கட்டி, கணினி உள்ள இடம், மேஜை அல்லது பணிபுரியும் இடங்களில் கண்ணுக்கு தெரியும் வகையில் இடம் பெற செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் ஆற்றும் பணி சிறப்பாகவும், நிலைத்த செல்வத்தை அளிக்க கூடியதாகவும் இருக்கும். கணினியை வெகு சிறப்பாகக் கையாண்டு ொருளாதார வெற்றிகளைக் குவிக்க முடியும். அடிக்கடி பழுதாகக்கூடிய கணினிகளை மேம்படுத்தவும், பழுதுகள் குறைவாக ஏற்படவும் இது பரிகாரமாக அமைகிறது.மேலும் பணிபுரிபவர்களின் ஒருங்கிணைப்பு, கடின உழைப்பிற்கான மனோபாவத்தை வளர்த்தல் மற்றும் நிறுவன மேம்பாட்டிற்கு இந்தப் பரிகாரம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
தங்கப் பதக்கம்
பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு மிக்க மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் அளித்து கௌரவிப்பதை கண்டிருக்கிறோம். விளையாட்டில் முதன்மை பெறுவோருக்கும், இதர சிறப்பு பணியாற்றல் கொண்டவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றன. இது அந்தந்த தகுதி உள்ளவர்களை மேலும் உற்சாகப்படுத்தி திறமையை வளர்க்கிறது.
ஆனால், இப்படி தங்கப் பதக்கம் எதையும் நாம் பெறவில்லை என்றாலும், நம் அலுவலக அறையில் பின்பக்க சுவரில் உயரத்தில் தங்கப் பதக்கம் போன்ற பரிசுப் பொருளை மாட்டி அலங்கரிக்கலாம்.இதனால் நாம் ஊக்கம் பெறுவதோடு, நம்முடன் பணிபுரியும் பணியாளர்களையும் ஊக்குவித்து துடிப்பு மிக்கவர்களாகவும் ஆக்கி நிறுவனத்தை மேலோங்க செய்ய முடியும்.
வளரும் செடி
தாவரம், வளர்ச்சியை குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. புதிய, ஆரோக்கியமான வாழ்க்கையையும் இது காட்டுகிறது.பணிபுரியும் இடம், காசாளர் இடம், வரவேற்பு அறை, முக்கியஸ்தர்கள் கூடும் அறை ஆகிய இடங்களில் வளரும் சிறு செடிகள், போன்சாய், மூங்கில் செடி போன்றவற்றை தொட்டிகளில் பராமரிக்கும்போது அவ்விடம் ‘ச்சீ’ சக்தியால் நிரம்பியிருக்கும்; நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
தங்கம், வெள்ளி அல்லது தாமிர நிறம் கொண்ட வட்டவடிவமான இலைகளை உடைய தாவரமாக இருப்பின் அது கூடுதல் சிறப்பாக அமையும். தற்போது ஹோட்டல்கள், விடுதிகள் போன்ற இடங்களில் மேஜை மீது தாவரத் தொட்டிகளைக் காணமுடிகிறது.
நம் கோயில்களில் புராதனமாக ‘‘ஸ்தல விருட்சம்” என்ற பெயரில் தாவரத்தை வளர்த்துப் பராமரித்து வருகின்றனர். இது கோயிலுக்கு வரும் பக்தர்களின் விருப்பங்களை ஈடேற்ற வல்லது; அவர்கள் மனதில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கவல்லது. துளசி செடி, வில்வம், வன்னி மரம், அரசமரம் போன்றவற்றை நாம் வலம் வருவதும் அந்த தாவரங்களில் ஆசியை நாம் பெறத்தான்.
பண விரயத்தை தடுக்க வழி
பணம், நம் கைக்கு வந்த வேகத்திலேயே விரயமாகி விடும் சூழ்நிலை பலருக்கு வருவதை கண்கூடாக காண்கின்றோம். பட்ஜெட் எப்படி போட்டாலும் துண்டு விழுகிறதே என ஆதங்கப்படுபவர்கள் எளிய வழி ஒன்றை கடைபிடிக்கலாம்.
செராமிக் (அ) சீன களிமண்ணால் செய்யப்பட்ட தொட்டியில் சிவப்பு வண்ண பூக்களை உடைய செடிகளை பராமரித்து வந்தால் பணம் நீராய் கரைவது குறைந்து சேமிக்கும் பக்குவம் கிடைக்கும். பணப்பிரச்னைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். மேலும் கண்ணாடி ஒன்றை வைத்து பூச்செடியை அதில் பிரதிபலிக்கச் செய்யும்போது போனசாக பணம் சேரும் வழியாக அது அமையும்.
இதோடு, தொட்டியில் 3 காசுகளை ஒட்டிவைத்தோமானால் மேலும் பல கூடுதல் பலன்களைப் பெற முடியும்.சமையலறையில் தொடர்ந்து வெளிச்சம்இருட்டு உள்ள இடம் தீய சக்திகளை வரவழைக்கும். அதே நேரத்தில் ஒளி மிகுந்த இடம் ‘‘ச்சீ” என்ற நல் சக்தியை வரவேற்கும். இப்படி தொடர்ந்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை சமையலறையில் நிறுவ வேண்டும்.அதாவது, சமையலறையில் பணியாற்றும் போது நல்ல வெளிச்சத்துடன் கூடிய விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
சமையலறை வேலை முடிந்து வெளியே வரும்போது, குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகளை எரிய விடலாம். இதனால் ‘‘ச்சீ” சக்தி எந்நேரமும் சமையலறையில் இருக்கும்; அதனால் நிறைவாக சக்தி கொண்டதாக சமையல் அறை மாறும். மேலும் பூச்சிகள் தொந்தரவும் குறையும்.
எனவே சமையலறையில் மட்டுமாவது இவ்விதம் விளக்குகளை பராமரிப்பது விருந்தோம்பலை வளர்ப்பதுடன், சக்தி நிறைந்த உணவை சமைக்கவும் அதனால் குடும்பத்தார் ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்புகள் உள்ளன.
மாணவர்கள் கவனத்திற்குமாணவர்கள் வடக்கு/கிழக்கு நோக்கி அமரும் வகையில், தெற்கு/மேற்கு சுவரை ஒட்டி மேஜையை அமைக்க வேண்டும்.வடக்கு/கிழக்கு சுவரில் (பார்க்கும் வகையில்) சிவப்பு நிற பூக்கள் கொண்ட படங்களை கொண்டு அலங்கரிக்கலாம்.
மேஜை, நாற்காலிக்கு கீழே சிவப்பு வண்ணத்துடன் கூடிய கலை வேலைப்பாடு மிகுந்த மேட் எனப்படும் தரை விரிப்பை உபயோகிக்கவும்.வலது பக்கத்தில் பேனாவை வைக்கவும். எந்நேரமும் இலை, பூக்கள் மிதக்கும் வெள்ளை நிற ஜாடியை வடகிழக்கு மூலையில் வைக்கவும்.இப்படி செய்வதால் முதன்மையான மதிப்பெண்கள் பெறுவதுடன், பாராட்டுகளும் தாமாகவே வந்து சேரும்.
பொதுவாக நம் வீட்டில் பணப்பெட்டி எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்ற சந்தேகம் வருவதுண்டு. அதாவது பணப்பெட்டியை சிலர் பீரோவில் வைப்பர் அல்லது அதற்கென தனிஇடத்தை ஒதுக்கி நகை மற்றும் பணத்தை சேமிப்பர்……நாம் சேமிக்கும் இடம் வாஸ்துபடி நமக்கு வளர்ச்சியை தருவதாக இருக்க வேண்டும் அல்லவா…..இதை படிங்க.
பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில் லாபம் தராது. பணம், நகைகள் இவற்றை வைக்கும் அலமாரி (அ) இரும்புப் பெட்டியை தென் மேற்கு அறையில் தெற்கு பக்கமாக வைக்கலாம். இவை வடக்கு, கிழக்கு முகமாக இருக்கும்படி அமைக்கலாம். இவற்றை தரைக்கு சற்று உயரமாக வைக்க வேண்டும். அல்லது மரத்தால் செய்த 1 அடி உயரமான நாற்காலி செய்து அதன் மேல் நிலையில் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியை வடக்கு (அ) கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாம்.
அதில் வைக்கும் பணம் தங்கும், வீண் செலவைத் தராது. வடக்கு அறையில் வட மேற்கில் வைக்கலாம். வடக்கு (அ) கிழக்கு முகமாக திறக்கும் நிலையில் வைப்பது இன்னும் சிறப்பாகும். சிலருக்கு எந்த திசை என்று சரியாக கனிக்கத் தெரியாது. இவர்கள் வாஸ்து ஜோதிடரை அணுகி சரியான திசையை பின்பற்றலாம்.
நாமும் பிரமிட் செய்யலாம்: அறிவியலாலும் அறிய முடியாத
பிரமிடுகள் !!!
பிரமிடுகள் சதுரமான அடிப்பரப்பின் மேல்
நான்கு முக்கோணப் பரப்புகளுடன்
அமைந்தவை. எகிப்தில் உள்ள பிரமிடுகள்
உலகின் ஏழு அதிசயங்களில் இடம்
பெற்றுள்ளன.
கெய்ரோ நகருக்கு வெளியில் உள்ள பெரிய
பிரமிடு பிரசித்தமானது. அது சியாப்ஸ் என்ற
மன்னனுக்காக ஹெர்மஸ் என்ற கட்டடக்கலை
நிபுணரால் கட்டப்பட்டது. பதிமூன்று ஏக்கர்
பரப்பளவில் மூவாயிரும் அடி சுற்றளவுள்ள
அடித்தளத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்
கிறது. கிட்டத்தட்ட 54 டன் எடையுள்ள
சுண்ணாம்புக்கல் பாளங்களை அடுக்கி அது
உருவாக்கப்பட்டது.
எகிப்திலுள்ள பல பிரமிடுகளின் உள்ளே
மன்னர், அவரது மனைவியர், மந்திரி
பரிவாரங்கள், வளர்ப்பு விலங்குகள்
ஆகியவர்களின் பதப்படுத்தப்பட்ட (மம்மி)
உடல்கள் அற்புதமான வேலைப்பாடுகளுடன்
கூடிய பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
மதிப்பிட முடியாத அளவுக்குப் பொன்னும்
மணிகளும், அரிய வகைப் பொருள்களும்
அவற்றுடன் வைக்கப்பட்டிருந்தன. பல
நூற்றாண்டுகளாக கல்லறைத் திருடர்கள்
பிரமிடுகளுக்குள் நுழைந்து
அச்செல்வங்களைச் சூறையாடியிருக்கிறார்கள்.
அதிலிருந்து தப்பியது டூட்டன் காமன் என்ற
மன்னனின் கல்லறை மட்டுமே. அதில்
காணப்பட்ட பொக்கிஷங்கள் மலைப்பூட்டுகின்றன.
பிரமிடுகளின் உள்பரப்பில் கணிதம், வடிவியல்,
வானவியல் குறியீடுகளிருப்பதாயும்
அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள
முடிந்தால் கி.மு.2000 ஆண்டு வரையிலான
மனித இன வரலாற்றை அறியலாம் என்றும்
எட்கார் கெய்சீ என்ற ஆய்வர் கூறுகிறார்.
பிரமிடுகளின் வடிவத்தில் குடிசை கட்டி
அதற்குள் அமர்ந்து பூஜை, தியானம், தவம்
ஆகியவற்றைச் செய்தால் பெரும் பயன்
உண்டாகும். செவ்விந்தியர்கள் ஒரு பெரும்
போர் செய்யும் போதெல்லாம் அதற்கு
முன்னிரவில் தளபதிகளை பிரமிட் வடிவக்
குடிசைகளுக்குள் உறங்கச் செய்வார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் போவிஸ் என்ற
பிரான்சு நாட்டுப் பயணி சியாப் பிரமிடுக்குள்
நுழைந்து பார்த்தார். யாரோ மன்னனின்
கல்லறை அந்த பிரமிடின் மூன்றில் ஒரு பங்கு
உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறை
குளிர் சாதனம் நிறுவப்பட்ட அறையைப் போல
குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்துடனுமி
ருந்ததைக் கண்டு அவர் வியந்து போனார்.
அதைவிட வியப்பூட்டும் வகையில் அங்கே
எலிகளும் பூனைகளும் செத்துக் கிடந்தன.
அவை பிரமிடுக்குள் புகுந்தபின் வெளியேற
வழி தெரியாமல் அங்கேயே இறந்து போனவை.
ஆனால் அவற்றின் உடல்கள் நாறி அழுகிப்
போகவில்லை. அவை உலர்ந்து வற்றல்களாகப்
பதப்பட்டவை போல இருந்தன. மன்னரின்
உடல்கூட அதேபோல பதப்படுத்தப்பட்டு
வைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு உடல்கள் கெடாமலிருப்பதற்கு,
எகிப்தியர்களின் உடல் பதன முறைகளுடன்
பிரமிடின் முக்கோண வடிவமும்
காரணமாயிருக்கலாமென்று போவிஸ்
ஊகித்தார்.
அவர் நாடு திரும்பியதும் தன் வீட்டில்
மூன்றடி அகலமுள்ள ஒரு பிரமிடை அமைத்து
அதை வடக்கு தெற்காக திருப்பி வைத்து
அடித்தளத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு
உயரத்தில் ஒரு பூனையின் சடலத்தை
வைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அந்தச்
சடலம் அழுகிப் போகாமல் உலர்ந்து வற்றலாகி
இருந்தது.
போவிஸ் பல்வேறு தாவரப் பொருள்களையும்,
மாமிசப் பொருள்களையும் அவ்வாறு
பிரமிடுக்குள் வைத்தபோது அவையும்
அழுகிக் கெடாமல் உலர்ந்து விடுவதைக்
கண்டார். பிரமிடின் ஏதோ ஒரு புரியாத
தன்மையே அதற்குக் காரணமென்று அவர்
முடிவு செய்தார்.
போவிசின் ஆய்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட
கரேல் ட்ரபால் என்ற செக் நாட்டு ரேடியோ
பொறியாளர் தானும் பல பிரமிடுகளை
அமைத்து சோதனைகள் செய்து அவற்றின்
உள்ளிட அமைப்புக்கும் அங்கு நிகழும்
பௌதிக, ரசாயன மற்றும் உயிரியல்
செயல்பாடுகளுக்குமிடையில் ஏதோ
தொடர்பிருப்பதாக ஊகித்தார். அந்த இடத்தின்
வடிவத்தை மாற்றியமைத்து அந்தச்
செயல்பாடுகளை விரைவுபடுத்தவோ
மெதுவாக்கவோ முடியுமென்று அவர்
கருதினார்.
சவரக் கத்திகளை நிலவொளி படும்படி
வைத்தால் அவை மழுங்கிவிடும். நிலவொளி
முனைவாக்கமானது. அதன் அலைகள் ஒரு
தளத்தில் மட்டுமே அலைவு செய்கிறவை.
அவை சவரக் கத்தியை மழுங்க
வைத்துவிடுகின்றன. ஆனால் அதை ஒரு
பிரமிடுக்குள் வைத்தால் அது
மழுங்குவதில்லை.
முனைவாக்க ஒளி, காஸ்மிக் கதிர்கள், மின்
காந்தக் கதிர்கள் அல்லது வேறு வகை ஆற்றல்
கதிர்கள் போன்றவற்றை பிரமிடு தன்னுள்
கிரகித்துக் கொண்டு விடுவதாகவும் அவை
அதற்குள் நிகழும் பௌதிக, ரசாயன மற்றும்
உயிரியல் மாற்றங்களைப் பாதிப்பதாகவும்
டிரபெல் முடிவு செய்தார்.
அவர் பலவிதமான அளவுகளில் பிரமிடுகளை
அமைத்து சவரக் கத்திகளையும் எஃகு
பிளேடுகளையும் வைத்து சோதித்தார். சில
பிளேடுகளை இருநூறு முறைகளுக்கும்
மேலாக சவரம் செய்யப் பயன்படுத்த
முடிவதை அவர் அறிந்தார்.
1950ஆம் ஆண்டில் அவர் பிராகா நகரிலுள்ள
காப்புரிமை அலுவலகத்துக்குச் சென்று, தான்
உருவாக்கிய பிளேடு தீட்டும் பிரமிடுக்கு
காப்புரிமை கோரினார். அந்த அலுவலகத்தின்
தலைமைப் பொறியாளர் தாமே ஒரு பிரமிடைச்
செய்து அதில் பிளேடுகளை வைத்துச்
சோதித்துத் திருப்தி அடைந்து டிரபெலுக்குக்
காப்புரிமை வழங்கினார்.
“பிரமிடின் ஆற்றல்”
**********************
அடிப்பாகம் சதுரமாகவும், அதன் நான்கு பக்கங்களை, நான்கு சமமான, இருசமபக்க முக்கோணங்களின் அடிப்பக்கமாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டு ஒரு கன வடிவமே-கூம்பு கோபுரமே, பிரமிடாகும். நான்கு முகோணங்களின் உச்சிப்புள்ளிகள் ஒன்று சேரும் புள்ளி பிரமிடின் உச்சிப்புள்ளியாகும்.
இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும் ஒன்றுதான் பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும்.
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் “கீஜாவில்” பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்.
பிரமிட் தியானம்
******************
பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் ‘பிரமிட் தியான’மாகும். பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.?
பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஒய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாகப,் பலர் கூறுகின்றனர்.
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க,? பிரமிட் உதவுகின்றது.
பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகின்றன.
பதப்படுத்தி காத்தல்
*********************
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன.
துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.
சிகிச்சை அளித்தல்
*********************
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியான விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது. கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல?் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளிக்கின்றது. பிரமிட் சக்தி!
அகவுடல் பயண அனுபவங்கள?்
*********************************
பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் (சூட்சும சரீரம்) பிரயாணம் மிக எளிதாக நிகழ்கின்றது. பிரமிட் தியானத்தினால் கனவுகள் மிகத் தெளிவாக நினைவில் இருப்பதால் அன்றாட வாழ்வின் அர்த்ததத்தை நன்கு புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.
பிரமிட் செய்யும் முறை
*************************
எந்தப் பொருளைக்கொண்டும் பிரமிட் செய்யலாம். ஒரு பிரமிடின் உயரம் 1 அடி எனில் அதன் அடிப்பக்கத்தின் நீளம் 1.5708 அடியாகவும், முக்கோணத்தின் இருசம பக்கத்தின் நீளம் 1.4945 அடி நீளமாகவும் இருக்கவேண்டும். இங்கு உயரம் என்பது பிரமிடின் உச்சிப்புள்ளியிலிருந்து அடிப்பாகம் வரை உள்ள உயரமாகும்.
ஒவ்வொரு முக்கோணத்தின் இருசம பக்கங்களின் ஒரு பக்கம் அடிப் பக்கத்துடன் உண்டாக்கும் கோணம் 51டிகிரி, 52 நிமிடமாகும். இப்பிரமிட் பெரிய எகிப்திய “கீஜா” பிரமிடின் சிறிய வடிவமாகும். பிரமிடை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திசைகளோடு இணைந்திருக்குமாறு, பொருந்துமாறு, நிலை நிறுத்த வேண்டும
நாமும் பிரமிட் செய்யலாம்:
*****************************
ஒரு கெட்டியான அட்டையில் 9.3/8 அங்குல
நீளமுள்ள அடிப்பக்கமும் 8.7/8 அங்குல
நீளமுள்ள இரண்டு பக்கங்களும் உள்ளவாறு
நான்கு முக்கோணங்களை வரைந்து
வெட்டியெடுக்க வேண்டும். அவற்றை
வ்ஸலோ டேப்பின் உதவியால் ஒட்டினால்
ஆறு அங்குல உயரமுள்ள ஒரு பிரமிட்
கிடைக்கும்.
ஒரு பெரிய காகிதத்தில் அதன் அடிப்பரப்பை
வரைந்து கொள்ளவும். அது சதுர வடிவில்
இருக்கும். அதன் பக்கங்களின்
மையப்புள்ளிகளைக் குறித்துக் கொள்ளவும்.
அடுத்து எதிர் எதிர்ப் பக்கங்களின்
மையங்களை இணைக்கிற மாதிரி நீளமாக
இரண்டு கோடுகளை வரையவும். அவை
சதுரத்தை, நான்கு கால் பகுதிகளாகப்
பிரிக்கும். அவை சந்தித்துக் கொள்கிற
புள்ளிதான் பிரமிடின் அடி மையம்.
ஒரு காந்த ஊசியின் உதவியுடன் ஒரு கோடு
தெற்கு வடக்காகவும் மற்றது கிழக்கு
மேற்காகவும் இருக்கும்படி திருப்பி
வைக்கவும். அடி மையத்தின் மேல்
இரண்டங்குல உயரமுள்ள ஒரு சிறு
மரக்கட்டையை நிறுத்தவும்.
அதன்மேல் ஒரு
மழுங்கிய எஃகு பிளேடை வைக்கவும். அதன்
கூர் விளிம்புகள் கிழக்கையும் மேற்கையும்
பார்த்திருக்க வேண்டும். பிரமிடின் மேல் முனை
அதன் அடி மையத்துக்கு நேர்
மேலேயிருக்கும்படி அதை பிளேடின் மேல்
கவிழ்த்து வைக்கவும்.
ஒரு வாரம் கழித்து அந்தப் பிளேடை எடுத்து
தினமும் முகசவரம் செய்து கொள்ள முடியும்.
அவ்வாறு சவரம் செய்து முடித்தவுடன்
உலர்ந்த துணியால் துடைத்து பழையபடி
அந்தப் பிளேடை பிரமிடுக்குள் வைத்து
மூடிவிட வேண்டும். ஆனால் நவீனமான
ஸ்டெயின்லெஸ் பிளேடுகள் அதிகமாக
கூர்மையடைவதில்லை.
பிளாஸ்டிக், பிளைவுட், கண்ணாடி போன்ற
மின் கடத்தாப் பொருள்களாலும் பிரமிடுகளை
அமைக்கலாம். மேற்கூறிய அளவுகளை
இரண்டு, மூன்று, நான்கு போன்ற முழு
எண்களால் பெருக்கி தேவையான பரிணாமத்தில்
அவற்றை உருவாக்கலாம். ஆனால் அவற்றின்
அருகில் மின் சாதனங்களேதும்
இருக்கக்கூடாது.
மீன் போன்ற ஊன் உணவுகளை பிரமிடுக்குள்
வைத்தால் அவை கெட்டுப் போவதில்லை.
அவற்றில் உள்ள ஈரம் விரைவாக உலர்ந்து
விடுகிறது. பிரமிடு வடிவக் குல்லாய்களை
அணிந்தால் தலைவலி தணிகிறது. பிரமிடுகள்
வடிவக் கூடாரங்களுக்குள் படுத்தால் நல்ல
தூக்கம் வருகிறது. இரவு நேரத்தில் நாவறட்சி
ஏற்படாததால் அடிக்கடி நீர்பருகவும் சிறு நீர்
கழிக்கவும் எழுவது குறைகிறது.
பிரமிடுகளுக்குள் வைக்கப்படும் நீர்
சுத்திகரிக்கப்படுகிறது. பிரமிடு வடிவ
பந்தல்களுக்கடியில் தாவரங்கள்
விரைவாகவும் செழிப்பாகவும் வளர்ந்து அதிக
விளைச்சலை அளிக்கின்றன.
கெய்ரோவிலுள்ள எயின்ஷாம்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர்கள்
செப்ரன் மன்னனின் பிரமிட் முழுவதும்
கல்லாலானதா அல்லது அது உள்கூடுள்ளதா
என்று கண்டறிய விரும்பி அதனுள் நவீன
மின்னணுக் கருவிகளை வைத்துச் சோதனை
செய்தார்கள். அக்கருவிகள் ஒரு நாள் காட்டிய
பதிவுகளுக்கும் மறு நாள் காட்டிய
பதிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள்
தென்பட்டு அவர்களைக் குழப்பத்தில்
ஆழ்த்தின.
எந்தவொரு பௌதிக விஞ்ஞான விதிக்கும்
மின்னணு விதிக்கும் அவை ஒத்துவரவில்லை.
கிட்டத்தட்ட ஓராண்டு உழைப்புக்கும், பெரும்
பணச் செலவுக்கும் பலனாக, அர்த்தமில்லாத
அளவீடுகளும் சங்கேதக்குறிகளும் நிறைந்த
பதிவு நாடாக்கள்தான் மிஞ்சின.
அறிவியல் ரீதியில் பார்த்தால் இது
நிகழக்கூடாத, நிகழ முடியாத ஒரு சம்பவம்.
ஆனால் தேர்ந்த விஞ்ஞானிகளின்
கண்ணெதிரிலேயே அது நிகழ்ந்தது. பிரமிடின்
மர்மத்தை நவீன அறிவியலால்கூட விளங்கிக்
கொள்ள முடியவில்லை.
நன்மை அருளும் ராகுகால பூஜை
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.
ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை ‘மங்கள சண்டிகையாக’ வணங்குவதே காரணம். செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.
வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகுகாலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.
அதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
வீட்டில் பூஜை செய்யும் முறை
ராகுகால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.
வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.
செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகுகாலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.