Home ஆன்மீக செய்திகள் அப்பனே ஆலவாயனே*

_கருவில் சுமக்கும் தாயைப் போல …_

_மார்பில் சுமந்து கொள்ளும் தந்தையைப் போல …_

_பாசப்பிணைப்பில் தினம் தினம் சண்டையிடும் சகோதரன் போல …_

_அன்புக்கரம் நீட்டி அணைத்துக் கொள்ளும் தோள் கொடுக்கும் தோழனைப் போல …_

_கல்விச் சீலன் எனச் சொல்லும் அளவுக்கு என்னைப் பட்டை தீட்டிய குருவைப் போல …_

_மொத்தத்தில் என் உடலைச் சுமக்கும் உயிரைப் போல …_

_எனக்குள் இருந்து எமைச் சுற்றி சுற்றி என்னைக் காக்கின்ற பரம் பொருளே .._

_ஜோதிச் சுடரே_
_கருணைக் கடலே .._
_திருநீலகண்டனே …_

_என்னுடன் நீ இருப்பதால் தோல்விகள் கூட தோற்றுப் போய்விடும் …_

_வெற்றிகள் தானே வரும்… புகழ்கள் தேடி வரும்…_

_அப்படிக் கிடைக்கும் மாலைகளும் வெற்றிகளும் எல்லாப் புகழும் என் தலைவன் ஒருவனுக்கே… எமையாளும் ஈசனுக்கே…_

*வாழ்க நமச்சிவாயம் …*

*ஓம் நமசிவாய*
*ஓம் நமசிவாய*

You may also like

Translate »