868
எந்தவொரு காரியத்திலும் தடைகள் அதிகரிக்கிறதா? வேலைவாய்ப்பு, திருமணம், சொத்து விற்பனை, தொழில் முயற்சி போன்றவற்றில் தடைகளும், தாமதங்களும் அதிகரிப்பவர்கள், அந்த போராட்டமான நிலை அகல விஷ்ணுவின் நான்கு நிலையுடைய திருக்கோவில்களுக்கும் வரிசைப்படி சென்று வழிபட்டு வரவேண்டும்.
திருமாலின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம், நடந்த கோலம் அமைந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், காரியத்தடைகள் காணாமல் போகும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெற, இந்த நான்கு வடிவங்களில் காட்சிதரும் திருமால் படங்களை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபடலாம். உலகளந்த பெருமாள் படத்தை நடந்த கோலமாக வைத்து வழிபடலாம்.