Home ஆன்மீக செய்திகள் பைரவர் மந்திரங்கள் – பைரவர் வழிபாட்டு முறை – தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டு முறை

பைரவர் மந்திரங்கள் – பைரவர் வழிபாட்டு முறை – தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டு முறை

by Sarva Mangalam

 

 

 

 

ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்தை கடுமையான விரதத்தோடு பாராயணம் செய்து வந்தால் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் எப்பேற்பட்ட தீய சக்திகளிடம் இருந்தும் நம்மை துன்பம் அனுகாது. பைரவருக்குரிய மந்திரங்களில் மூன்று(3) மந்திரங்கள் வருமாறு.

“ஓம் பைரவாய நமஹ”

“ஓம் ப்ராம் பைரவாய நமஹ”

“ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் சுவஹா”

சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ, செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ பைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியில் விளக்கேற்ற வேண்டும்.

தினமும் 48 முறை ஜபம் செய்து வந்தால் துன்பங்களுக்கு துன்பம் தரும் தூய சக்தியாகி விடுவோம். பைரவர் சன்னதிக்கு சென்றது முதல் வீடு திரும்பும் வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அசைவ உணவு பழக்கம் முழுவதுமாக தவிர்த்திட வேண்டும். சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஜபம் செய்து வருவது நல்ல பலன்களை உணரலாம்.

ஓம் பைரவாய நமஹ!

You may also like

Translate »